ஈழத்து வலி...
இரமேஸ்வரத்தில் எல்லோரும் குளித்து கரை ஏறுகிறார்கள்
நாங்கள் குதித்து கரை ஏறுகிறோம் ...
பிறந்த குழந்தைய்ன் நெற்றியில் வைக்கிறாள் பிடி
மண்ணாய் கொண்டு வந்த தாய் மண்...
கடல் கடந்து பார்க்க வந்ந்திருக்கின்றன
சோறு வைத்த காக்கைகள்...
படகில் ஏறினோம் படகை விற்று
ஆழிப் பேரலைகளும் எங்கள் பெண்களை
வீடு புகுந்து இழுத்து போய் கொல்லத்தான் செய்தன
ஆனாலும் இலங்கை வானொலியில் இருந்து
நீங்கள் பிறந்த நாள் வாழ்த்து கேட்கிறீர்கள்
நாங்கள் மரண அறிவித்தல் கேட்கிறோம்...
முகாமிற்கு அருகில் உள்ள பள்ளியில் இருந்து கேட்கிறாது
"யாதும் ஊரே யாவரும் கேளிர்"
- இப்படிக்கு வலிகளுடன் உங்கள் சொந்தங்கள்...
Labels:
ஈழம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment