வாசகர் கேள்வி-பதில்

நம்ம வலைத்தளத்தில் கேள்வி பதில் பகுதிக்கு கேள்வி அனுப்புங்கன்னு சொன்னாலுஞ்சொன்னோம்,தபால் நிலையங்களிளெல்லாம் ஒரே தள்ளு முள்ளு. உலகம்முழுவதும் கேள்விக்கணைகள் ஏவுகணைகள் போல் வந்து இறங்கியிருக்கின்றன. எத்தியோப்பியாவில் இருந்துகூட ஏழு சாக்கில் கேள்விகள் வந்திருக்கின்றன. மூட்டை மூட்டையாய் கடிதங்களை தூக்கிவந்தே அந்த தபால்காரருக்கு 'சிக்ஸ் பேக்' வந்து விட்டது. இந்த மக்களின் அறிவுப்பசிக்கு ஒரு அளவில்லாமல் போய் விட்டது. சிறப்பான கேள்விக்கு வாராவாரம் மெகா பரிசாக ரூபாய் 101 வழங்கப்படும்னு சொன்னதும் கூட காரணமாய் இருக்கலாம். இந்த வார பகுதிக்கு செல்வோம்.

1) கடவுள் இருக்கிறாரா?? இல்லையா ?? (நெடுமுடியான், திருப்பதி)

யோவ் நீ ஸ்டாம்ப் ஓட்டமா அனுப்பின லெட்டருக்கு நான் பதில் சொல்றேனே அப்பவே தெரிய வேணாம்....கடவுள் இருக்கான்யா....


2) தமன்னா அழகா? அனுஷ்கா அழகா ? நீங்களே சொல்லுங்களேன் ...??(அழகப்பன்,காரைக்குடி)

இத மெனக்கெட்டு கேள்வின்னு கேட்ருக்க பாரு நீ தாண்டா செல்லம் அழகு....


3) நான் தங்கள் வலைத்தளத்தை கடந்த முப்பதாண்டுகாளாய் படித்து வருகிறேன்.உங்களை மாதிரி ஒரு Writer தமிழகத்தில் இல்லையென்கிறேன்....சரி தானே?? (திருவள்ளுவர்,மயிலாப்பூர்)

என்ன இப்டி சொல்லிடீங்க..நம்ம R2 ஸ்டேஷன்ல ஒரு Writer இருக்காரு...சும்மா குண்டு குண்டா சூப்பரா எழுதுவாரு...உங்களுக்கு தெரியாதா...





4)கலைஞரும் கேள்விபதில் எழுதுறாரு..நீங்களும் கேள்வி பதில் எழுதுறீங்க...உங்களுக்கும் அவருக்கும் என்ன வித்யாசம்??? (ஜெயா,ஸ்ரீரங்கம்)
60வயது ...மூன்று மனைவிகள்...


5)இவ்வளவு வளங்கள் இருந்தும் இந்தியா முன்னேராததற்கு காரணம் 'கண் திருஷ்டி' தானே ??? (கேது,திருநள்ளாறு)

கரெக்டா கண்டுபுடிச்சீங்க...ஒரு ஹெலிகாப்டர்ல மிளகா அம்பது கிலோ ,எலுமிச்சை இருபது கிலோ...மஞ்சள் முப்பது கிலோனு எடுத்துகிட்டு போய் இந்தியாவையே சுத்திவந்து வங்கக்கடல்ல போட்டு காரித்துப்பீருங்க ..திருஷ்டி கழிஞ்சிரும்...


6)அது ஏன் நூறு ரூபாய் நோட்ல காந்தித்தாத்தா படம் போட்டிருக்கு??? (அருமைநாயகம்,ஆத்தூர்)

அப்புறம்..உங்க அப்புத்தா படமா போடுவாங்க....




7)கௌதம் மேனனின் அடுத்த படம் எப்போ வரும்..??(சத்யஜித்ரே,வட பழனி)

அவர் வீட்ல HBO சேனல் ரெண்டு மாதமாய் வரவில்லையாம்.அதனால் படம் தள்ளிபோகும் என்று தெரிகிறது.


8)நான் குமாரை காதலிக்கிறேன்.குமாரோ மீனாவை காதலிக்கிறான்.மீனா பாபுவை காதலிக்கிறாள்.பாபு நேத்து எனக்கு லவ் லெட்டர் கொடுத்தான். நாங்கள் இப்போ என்ன செய்ய வேண்டும்.(ஊர் பெயர் வெளியிட விரும்பாத வாசகி)

ம் ...நீங்க மருந்த குடிச்சி சாக வேண்டும்...


9) நான் மிகப்பெரிய பணக்காரனாக வேண்டும் ...அதற்கு என்ன செய்ய வேண்டும்?? (முலாயம் சிங், மூணாறு)

இந்த மாதிரி வெட்டித்தனமா கேள்வி எழுதிப்போடுவதை விட்டுவிட்டு வேலை மயி&** ஒழுங்காய் பார்க்க வேண்டும்.


10)ஊழலை ஒழிக்க வேண்டும்னு நம்ம ஆ.ராசா சிறையிலேயே உண்ணாவிரதம் இருக்க போறாராமே அப்டியா???(2G.கோபாலன், பெரம்பலூர்)

பிளாஸ்டிக்க ஒழிக்கணும்னு எங்கயாச்சும் பிராய்லர்கோழி போராட்டம் பண்ணி பாத்திருக்கீங்களா???

---தொடரும்

விலைமாது(A)

- படித்ததில் பிடித்தது

தொலைக்காட்சி,குளிரரூட்டி,நாற்காலி,கணினி
என எல்லாமிருந்த அறையில் அவர்களுக்கு
கட்டில் மட்டுமே தேவைப்பட்டது....

அவன் முயன்று முன்னேற
அவள் முனங்கிப் பின்வாங்கினாள்.

மனிதஇனத்தின் மகரந்த சேர்க்கை அங்கே
நடந்துகொண்டிருக்கிறது...
யார் பூ யார் வண்டு ஆராய்தல்
அவசியம் இல்லை...

ஆதாம் கண்டுபிடித்த ஆட்டம்
நிறைவு பெற்றது.
இளைத்துக் கலைத்தனர்- வியர்வை
முத்துக்கள் உடல் முழுக்க கோலம் போட்டது.

அவன் கலைமகன்.
அவள் விலைமகள்.

கற்பனையை பேனாவுக்குள் ஊற்றி
காட்சிகள் படைப்பவன் அவன்.
தன் உடலை பொதுவுடைமை
ஆக்கியவள் அவள்.

நாற்பதை தொட்டவன் அவன்.
இலக்கியம் இறுமாப்பு இரண்டும்
இரு கண்கள் அவனுக்கு...
குடும்பம்,பொறுப்பு போன்ற
இமைகள் கிடையாது..

பட்டினத்தாரையும் காதல் பாட்டு எழுத
வைக்கும் அழகு அவளது..
இந்த அவசர உலகம் கொடுத்த
"ஒரு மணி நேர மனைவி"- இவள்

ஜன்னல்களை திறந்தான். வானத்தை ஆராய்ந்தான்..
பேனா புத்தி அது
நிலவு நட்சத்திரங்கள் ஏதுமின்றி வானமும்
நிர்வாணமாய் இருந்தது......

புகைக்க தொடங்கினான்.
அவள் கோபம் கொண்டாள்.
கூடிய பின் புகைப்பது
அவனது நெடுநாள் பந்தம்.
ஆனால் புகைக்கக்கூடாதென்பது அவர்கள்
முன்னமே செய்த ஒப்பந்தம்!!!

அவனை ஏசினாள்.
காற்றை கற்பழிக்காதே என்றாள்.
அவனுக்கு கோபம் பற்றியது.
"வேசை தானே நீ... பலர் தொடும் பரத்தைக்கு திமிறென்ன??"
தீப்பிழம்பை கக்கினான்.
அவளோ எரிமலையானாள்.

அவள் கண்கள் சிவப்பானது.
அவனை ஏறிட்டு அற்பமாய் பார்த்தாள்.
"ஆம்.வேசை தான் நான்.." என
ஆரம்பித்து தொடர்ந்தாள்.

என்னிடம் வறுமைக்கதைகள் இல்லை.
நியாயப்படுத்தும் காரணங்கள் இல்லை.
உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...

துணை இழந்த வயதானவனின் வடிகால் நான்...
எங்கோ நடக்க இருக்கும் பாலியல் குற்றத்தைத்தடுக்கிறேன்...
உண்மையில் மிருகங்களின் காமங்களைந்து
மீண்டும் நாங்கள் தான் மனிதர்களாக்கி அனுப்புகிறோம்.
நாங்களில்லையேல் உன் சமுதாயம்
நாறி நாற்றமடிக்கும்....

இதுவும் ஒரு வியாபாரமே ....
ஏமாற்றில்லா...ஊழலில்லா... வியாபாரம்.
நீ அசைவம் கொலை என ஒத்துக்கொள்
நான் விபச்சாரம் தவறென ஏற்றுக்கொள்கிறேன்.

கற்பிழப்பவர் வேசை என்பது உன் சித்தாந்தமெனில்
நீயும் ஒரு வேசை தானே......

"வேசி" பெண்பால் என
எவன் சொன்னது??...

அவனருகே வந்து தாழ்ந்த குரலில்
மீண்டும் சொன்னாள்....

"உனக்குக் காமம் எப்படியோ
எனக்கும் அப்படியே...."


பேசிவிட்டு அறையிலிருந்து
விடைபெற்றாள்....

அவன் கண்ணிமைக்காமல் அவள்
சென்ற திசை நோக்கிக்கொண்டிருந்தான்.


தாளில் அடுத்த நாவலுக்குத் தலைப்பிட்டான்.
விலை(மதிப்பில்லா) மாது!!!!!!!!!!

நேற்று இரவு நேரப் பயணத்தில்...!


நேற்று இரவு நேரப் பயணத்தில்,
எல்லோரும் உண்ணுவிட்டு உறங்க,

ஏனோ என் இமைகளும் மனமும்
உண்ணாவிரதம் இருந்து,
உறங்க மறுத்தன!!!

எதிர்ப்பார்ப்பு ஏமாற்றத்தைத் தருமாமே?
நம்பவில்லை நான்!
ஆறுதல் கூற உன்னை எதிர் பார்த்தபோது..!


அப்போது, என்னைக் கவிஞனாய் மாற்றியது
உன் பிரிவு தான் என்றாலும்,
இந்த உலகத்தில் கவிஞனுக்கா பஞ்சம்?
வெறும் மனிதனாகவே இருந்துவிடுகிறேன்..!