
ரசமேடுத்து ரகசியமாய்
எனக்களித்த என்னவளே
யோகத்தின் சூத்திரத்தை
போகத்தின் பாத்திரத்தில்
தாரை வார்த்து தந்தவளே
வாதத்தின் வாளெடுத்து
வாழ்க்கையில் விளகேற்றி
வழிகாட்டி நின்றவளே
தாபத்தில் தோள் கொடுத்து
தடுமாறும் எனை தடுத்து
தாங்கியே வந்தவளே
மோகத்தில் மோத வைத்து
முகம் பார்த்து மனம் கோர்த்து - என்
மூர்கத்தில் தெளிந்தவளே
தியாகத்தில் தலைநிமிர்ந்து
சோகத்தை தனுள் ஈர்த்து
யாகத்தை வளர்த்தவளே
காமத்தில் கலை வளர்த்து
ஜாமத்தில் எனை வளைத்து
யாவும் தான் என்றவளே
என்னுளே வந்தவளே
எனையாள இன்பமடி
எந்நாளும் எந்நாளும்

வடிகால் இல்லா உணர்வு
கனவான எந்தன் கனவு
நினைவுகளே அதன் வரவு
கண்ணிரே நிதம் செலவு
ஏக்கத்தின் மொத்த விளைவு
இன்பத்தின் இறுதி முடிவு
தனிமையின் தாளா தவிப்பு
துயரத்தின் விடைபெறா உறவு
களையிழந்த எந்தன் நினைவு
நிஜமாக்கும் உந்தன் பிரிவு

அழியா நித்ய கோலம்
நினைவால் தினமும் யாகம்
புரியா இதய வேதம்
கனவால் என்றும் வாழும்
விடியா இரவு காலம்
இழையாய் தென்றல் விசும்
இனிய பழைய பாரம்
தினமும் தூது போகும்
நினைவின் மாய ஜாலம்
மனத்தால் ஏற்றும் திபம்
அணையா எனது தாபம்
உணர்வால் கலைந்த மேகம்
இடியாய் இடித்து மேலும்
மின்னல் துளைத்து பொழியும்
மழையாய் விழியை மீறும்
துடியாய் துடித்த இதயம்
அலையாய் அடித்து மடியும்
வெடியாய் வெடித்த பிரிவும்
விளங்கா நிஜத்தில் உழலும்
நிழலாய் கணமும் தொடரும்
வலியாய் அரிக்கும் நினைவும்
மலராய் விரிந்த போதும்
மணத்தை {மனதை} பறித்தாய் நீயும்
உயிரால் வாழ்ந்த போதும்
நிழலாய் வாழ்வும், சாவும்
இது தான் எந்தன் ராகம்
யார்தான் மீட்டக்{மீட்கக்} கூடும்

No comments:
Post a Comment