குண்டுச் செய்!


இன விடுதலைக்கெதிராய்
போராயுதங்கள் தந்த
புண்ணியவான்களே!

போர்முடிந்தது -அங்கே
பொழுது விடிந்ததா?

மண்ணையுண்டு காற்றைவிழுங்கி
மனிதன் வாழ வழியுண்டா?
எங்கள் துயரை எடுத்துரைக்க
எங்கேனும் மொழியுண்டா?

முள்வேலி நரகத்தில்
மூச்சு திணருது,
மூன்று லட்ச உயிர்களென
எந்த நாடு உணருது!!

ஓ…நாட்டாமை நாடுகளே!
இருக்கும் உயிரை…
காப்பாற்ற தொண்டுச்செய்!
இல்லயேல்…
எல்லா உயிருக்குமென
ஒரே ஒரு “குண்டுச் செய்”!

No comments:

Post a Comment