"நீ" என்றாலே சுகம்தான்...!


நினைவுகளும் சுகம்தான் ... - அது
"உன்னுடையதாக" இருந்தால்...

கனவுகளும் சுகம்தான் ... - அதில்

கைப்பிடித்து "நீ" நடந்தால்...

அழுவதும் சுகம்தான் ... - அங்கே

ஆறுதல் கூற "நீ" இருந்தால் ...

தடுக்கி விழவும் சுகம்தான் ... - அங்கே

தாங்கிப் பிடிக்க "நீ" இருந்தால்...

தள்ளாடும் வயதும் சுகம்தான்... - அங்கே

கைத்தடியாய் "நீ" இருந்தால் ...

மரணமும் சுகம்தான் ... - அது

"உன்" மடியிலேன்றால் ....

இப்படிக்கு
உயிரை (உன்னை) நேரில் பார்த்தவன்

No comments:

Post a Comment